Thursday, November 26, 2009

இன்றைய ஸ்பெசல்

சிக்கன் பிரியாணி (செட்டிநாட்டு முறை)

தேவையான பொருட்கள்

  • 1. பாசுமதி அரிசி - 1 1/2 கப்
  • 2. கோழி - 1/2 கிலோ (எலும்போடு பெரிதாக வெட்டிவைத்தது)
  • 3. வெங்காயம் - 1 (பெரிதாக நறுக்கியது)
  • 4. தக்காளி - 1 ( பொடியாக நறுக்கியது)
  • 5. பச்சை மிளகாய் - 5
  • 6. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • 7. தேங்காய் பால் - 1 1/2 கப்
  • 8. தண்ணீர் - 1 1/2 கப்
  • 9. கொத்தமல்லி, புதினா - 1/2 கப்
  • 10. தயிர் - 1/2 கப்
  • 11. எண்ணெய் - 100 மில்லி
  • 12. நெய் - 3 தேக்கரண்டி
  • 13. உப்பு
  • 14. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • 15. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • 16. கரம் மசாலா தூள் - 1/4 தேகரண்டி
  • 17. பட்டை
  • 18. லவங்கம் - 5
  • 19. பிரியாணி இலை - 1
  • 20. ஏலக்காய் - 3

செய்முறை

  • கோழியுடன் பாதி தயிர், மஞ்சள் தூள், பாதி உப்பு சேர்த்து கிளறி ஊறவிடவும்.
  • அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய், 2 தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.
  • இதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
  • இத்துடன் மீதமிருக்கும் தயிர், மிளகாய் தூள், மீதம் உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறி 3 நிமிடம் வைக்கவும்.
  • நன்றாக குழைந்து மிளகாய் தூள் வாசம் போனதும், ஊற வைத்துள்ள கோழியை சேர்த்து வேக விடவும்.
  • கோழி வெந்ததும் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி முக்கால் பாகம் வேக விடவும்.
  • இப்போது அதன் மேல் கரம் மசாலா தூள் தூவி, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சிறுந்தீயில் 10 - 15 நிமிடம் தம் போடவும்.
  • சாதம் முழுதாக வெந்ததும் இறக்கி விடவும். சுவையான செட்டிநாட்டு கோழி பிரியாணி தயார்.


செட்டிநாட்டு மட்டன்

பிரியாணி

தேவையான பொருட்கள்

  • சீரக சம்பா அரிசி - 3 கப்,
  • மட்டன் - 1/2 கி,
  • இஞ்சி - 50 கிராம்,
  • பூண்டு - 25 பல்,
  • பெரிய வெங்காயம் - 4,
  • சின்ன வெங்காயம் - 15,
  • தக்காளி - 3
  • பச்சை மிளகாய் - 4,
  • கிராம்பு - 4,
  • பட்டை - 4 துண்டு,
  • ஜாதிக்காய் - பாதி,
  • ஏலக்காய் - 4,
  • மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
  • கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்,
  • தேங்காய் - 1 மூடி,
  • முந்திரி - 10,
  • தயிர் - 1/2 கப்,
  • எலுமிச்சம்பழம் - 1 மூடி,
  • புதினா - 1 கட்டு,
  • மல்லி - 1 கட்டு,
  • நெய் - 1/2 கப்,
  • எண்ணெய் - 1/2 கப்.
  • --------------------------
  • தாளிக்கத்தேவையானவை
  • --------------------
  • கிராம்பு - 3,
  • பட்டை - 3 சிறிய துண்டு,
  • ஏலக்காய் - 3,
  • பிரிஞ்சி இலை - 1,
  • சோம்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை

  • மட்டனில் 1/4 கப் தயிர், மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன், கரம்மசாலா, உப்பு 1டீஸ்பூன் போட்டு 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை நெய் விட்டு வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  • பெரியவெங்காயம், சின்னவெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
  • பச்சமிளகாயை வாயை கீறிக்கொள்ளவும்.
  • பூண்டை தனியாக அரைத்துக்கொள்ளவும்.
  • துருவிய தேங்காய், இஞ்சி, முந்திரி இவை மூன்றையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும். ( இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ் க்காகத்தான். )
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய விடவும்.
  • காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, தாளிக்கவும்.
  • நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.
  • வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அரைத்த பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும், அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய்தூள் போட்டு வதக்கவும்.
  • 5 நிமிடம் போல வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியை போடவும்.
  • தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர்
  • சேர்க்கவும்.
  • இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும்.
  • உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
  • ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும்.
  • பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழம் பிழியவும்.
  • பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்.

No comments:

Post a Comment