Monday, February 8, 2010

ஏ. ஆர். ரகுமான்

ஏ. ஆர். ரகுமான்

அ. இர. இரகுமான்
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் ஏ.சே.திலீப்குமார்
பிறப்பு ஜனவரி 6 1967 (வயது 43)
தொடக்கம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வகை(கள்) திரைப்பட, மேடை இசை
தொழில்(கள்) இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி இசைப்பவர், நிரலாக்கர்
இசைக்கருவிகள் Electronic keyboards, vocals, கிட்டார், பியானோ, ஆர்மோனியம், percussion, ஏனைய
வலைத்தளம் அதிகாரபூர்வ இணையத் தளம்
அ. இர. இரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: சனவரி 6, 1967), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே. 2010-ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.
இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.
81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்[1].

பொருளடக்கம்

[மறை]

வாழ்க்கைக் குறிப்பு

ரகுமான் ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.

படைப்புகள்

திரைப்பட இசையமைப்புகள்

ஆண்டு தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம்
1992 ரோஜா ரோஜா ரோஜா
1993 ஜென்டில்மேன் ஜென்டில்மேன் தி ஜென்டில்மேன்
1993 கிழக்குச்சீமையிலே


1993 புதிய முகம்


1993 திருடா திருடா டொங்கா டொங்கா ச்சோர் ச்சோர்
1993 உழவன்


1994 டூயட்


1994 காதலன்
ஹம்ஸே ஹே முக்காப்லா
1994 கருத்தம்மா


1994 மே மாதம்


1994 புதிய மன்னர்கள்


1994 வண்டிச்சோலை சின்னராசு


1994 பவித்ரா


1994
சூப்பர் போலீஸ்

1994
கேங் மாஸ்டர்

1995 பம்பாய் பம்பாய் பம்பாய்
1995 இந்திரா


1995 முத்து


1995 ரங்கீலா
ரங்கீலா
1996 இந்தியன் பாரதீயடு ஹிந்துஸ்தானி
1996 காதல் தேசம் பிரேம தேசம் துனியா தில்வாலோன் கீ
1996 லவ் பேர்ட்ஸ்
ஃபயர்
1996 மிஸ்டர் ரோமியோ


1997 இருவர்


1997 மின்சாரக் கனவு மெருப்பு கலலு சப்னே
1997 ரட்சகன் ரக்ஷடு

1997

தவுட்
1998 ஜீன்ஸ் ஜீன்ஸ் ஜீன்ஸ்
1998 உயிரே ஹிருதயாஞ்சலி தில் ஸே
1998

தோலி சஜா கே ரக்ஹ்னா
1998

கபி நா கபி
1999 முதல்வன் ஒக்கே ஓக்கடு நாயக்
1999 தாஜ் மஹால்


1999 சங்கமம்


1999 காதலர் தினம் பிரேமிகுலு ரோஜு

1999 ஜோடி


1999 தாளம்
தாள்
1999 என் சுவாசக்காற்றே


1999 படையப்பா


1999

1947 எர்த்
1999

தக்ஷக்
1999

புக்கார்
2000 அலைபாயுதே சகி சாத்தியா
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ப்ரியலு பிலிச்சிந்தி

2000 ரிதம் ரிதம்

2000 தெனாலி தெனாலி

2000

தில் ஹே தில் மே
2001 ஸ்டார்


2001 பார்த்தாலே பரவசம் பரவசம்

2001 அல்லி அர்ஜூனா


2001

சுபைதா
2001

ஒன் 2 கா 4
2001

லவ் யூ ஹமேஷா
2001

லகான்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் அம்ருதா

2002 பாபா


2002 காதல் வைரஸ்


2002

தி லெஜன்ட் ஆஃப் பகத் சிங்
2002

சாத்தியா
2003 உதயா


2003 பரசுராம்


2003 பாய்ஸ் பாய்ஸ்

2003


வாரியர்ஸ் ஆப் ஹெவென் அண்ட் எர்த்
2003 எனக்கு 20 உனக்கு 18 நீ மனசு நாக்கு தெலுசு

2003 கண்களால் கைது செய்


2003

தெஹ்ஜீப்
2004 ஆய்த எழுத்து யுவா யுவா
2004 நியூ நானி

2004 தேசம்
ஸ்வதேஸ்
2004

லகீர்
2004

மீனாக்சி - எ டேல் ஆஃப் 3 சிட்டீஸ்
2004

தில் நே ஜிஸே அப்னா கஹா
2004

கிஸ்னா
2005

போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ
2005

மங்கள் பாண்டே - தி ரைஸிங்
2005 அ ஆ


2005

வாட்டர்
2006

ரங் தே பசந்தி
2006 சில்லுனு ஒரு காதல்


2006 வரலாறு


2007 குரு குரு குரு
2007

ப்ரோவோக்டு
2007 சிவாஜி


2007 அழகிய தமிழ் மகன்


2007


எலிசபெத்: தி கோல்டென் ஏஜ்
2008

ஜோதா அக்பர்
2008

ஜானே து யா ஜானே நா
2008

அடா : எ வே ஆப் லைப்
2008 சக்கரகட்டி


2008

யுவ்ராஜ்
2008

கஜினி
2008


ஸ்லம் டாக் மில்லியனியர்
2009

டில்லி 6
2009

ப்ளூ
2009


பாசேஜ்
2009


கபுள்ஸ் ரிட்ரீட்
2010 விண்ணைத்தாண்டி வருவாயா


  • குறிப்பு: "ஆண்டு", பன்மொழி திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டை குறிக்கும்.
பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:

திரைப்பட அல்லாத இசையமைப்புகள்

  • Return of the Thief of Baghdad (2003)
  • தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
  • செட் மீ ஃப்ரீ (1991)
  • வந்தே மாதரம் (1997)
  • ஜன கன மன (2000)
  • பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
  • இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
  • ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)
Tamilan

இவர் பெற்ற விருகள்

2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது, ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
சிகரமாக, 2010-ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

சனிக் கோளின் நிலவில் திரவம் இருப்பதை நாசாவின் விண்கலம் படம் பிடித்தது

சனிக் கோளின் நிலவில் திரவம் இருப்பதை நாசாவின் விண்கலம் படம் பிடித்தது

ஞாயிறு, டிசம்பர் 20, 2009
சனிக் கோளின் நிலவான "டைட்டானில்" திரவம் இருப்பதை நாசாவின் கசினி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி முதற் தடவையாக படம் பிடித்தது. பூமியை விட வேறு ஓர் உலகில் திரவமிருப்பது படம் பிடிக்கப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.

வழவழப்பான தெறிப்பைக் காட்டும் பிரபலமான புகைப்படம்
மிகவும் வழவழப்பான திரவ மேற்பரப்பொன்றில் தெறித்து வரும் கதிர்களை இவ்விண்கலம் படம் பிடித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு கசினி விண்கலம் இங்கு வந்ததில் இருந்து இவ்விடத்தைப் படம் பிடிக்க முயன்று வந்தது. 2008 ஆம் ஆண்டில் அகச்சிவப்பு (infrared) தரவுகளைக் கொண்டு திரவ மெத்தேன் ஆறுகள் இங்கு இருப்பதை இது உறுதி செய்தது. டைட்டானின் அநேகமான ஆறுகள் அதன் வடக்கிலேயே உள்ளன.

டைட்டானின் காற்று மண்டலம் பூமியைப் போன்றே நைதரசன் அங்கு அதிகமாகக் காணப்படுகிறது. ஆனாலும் டைட்டானின் பனிப்பிரதேசங்களில் வெப்பநிலை -180°C ஆகும். இது அங்கு உயிரினம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கிறது. இருந்தாலும், திரவம் அங்கு இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகளை அதிகரிக்கின்றது.

படத்தில் காணப்பட்ட ஆறு 400,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. படகு ஒன்றை இந்த ஆற்றில் இறக்குவதற்கு அறிவியலாளர் குழு ஒன்று நாசாவுக்குப் பரிந்துரைத்துள்ளது. "டைம்" எனப்படும் இப்படகு 2016 ஆம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்டால், 2023 ஆம் ஆண்டிலேயே டைட்டானைச் சென்றடையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளாது.

Saturday, January 23, 2010

கணினி

கணினிகள் செயல்படும் முறை

பொதுத் தேவைகளுக்கான ஒரு கணினி நான்கு முக்கியமான பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவை, # கணித ஏரண அகம் (arithmetic and logic unit)
  1. கட்டுப்பாட்டகம் (Control unit)
  2. நினைவகம் (memory)
  3. உள்ளிடு சாதனங்களும், வெளியீட்டுச் சாதனங்களும்
இப் பகுதிகள், கம்பித் தொகுதிகளினால் உருவாக்கப்படும் பாட்டைகளினால் (busses) ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டகம், கணித ஏரண அகம், பதிவகம் (registers), அடிப்படையான உள்ளிடு - வெளியீட்டுச் சாதனங்கள், இவற்றுடன் நெருக்கமாக இணைக்கப்படும் பிற வன்பொருட்கள் என்பன ஒருங்கே மையச் செயலகம் (central processing unit) எனப்படுகின்றன. தொடக்ககால மையச் செயலகங்கள் தனித்தனியான கூறுகளைக் கொண்டிருந்தன. ஆனால் 1970களின் நடுப்பகுதியில் இருந்து இவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ஒருங்கிணை சுற்றமைப்பாக (integrated circuit) உருவாக்கப்படுகின்றது. இது நுண்செயலகம் (microprocessor) எனப்படுகின்றது.

கட்டுப்பாட்டகம்

கட்டுப்பாட்டுத் தொகுதி அல்லது மையக் கட்டுப்படுத்தி என்றும் சில சமயங்களில் அழைக்கப் படுகின்ற கட்டுப்பாட்டகம், கணினியில் பல்வேறு கூறுகளை இயக்குகிறது. இது ஆணைகளை ஒவ்வொன்றாக வாசித்து அவற்றைக் குறிநீக்குகிறது (decode). கட்டுப்பாட்டுத் தொகுதி குறிநீக்கிய ஆணைகளைத் தொடராக கட்டுப்பாட்டுக் குறிப்புகளாக்கி அவற்றின் மூலம் கணினியின் பிற பாகங்களை இயக்குகிறது. உயர்தரக் கணினிகளில், கட்டுப்பாட்டகம், செயல்திறனை மேம்படுத்துவதற்காக ஆணைகளின் ஒழுங்கை மாற்றவும் கூடும்.
எல்லா மையச் செயலகங்களிலும் பொதுவாக இருக்கும் ஒரு கூறு ஆணைச்சுட்டியாகும். சிறப்பு நினைவகமான இக் கூறு, அடுத்த ஆணையை நினைவகத்தின் எவ்விடத்திலிருந்து வாசிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்கிறது.
கட்டுப்பாட்டகத்தின் செயல்பாட்டு ஒழுங்குகளும், அவற்றின் வகைகளைப் பொறுத்து மாறுபாடாக அமையக் கூடும். சில படிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செய்யாமல் ஒரே நேரத்தில் செய்யும் நிலைகளும் உண்டு. கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகள் எளிமைப் படுத்தப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
  1. ஆணைச்சுட்டியினால் சுட்டப்படும், அடுத்த ஆணைக்குரிய குறிமுறையை வாசித்தல்.
  2. கணினியின் பிற தொகுதிகளுக்கு ஆணை வழங்குவதற்காக எண்முறைக் குறியீடுகளை குறிப்புகளாக மாற்றும் பொருட்டு அவற்றைக் குறிநீக்குதல்.
  3. ஆணைச்சுட்டி அடுத்த ஆணையைச் சுட்டும் வகையில் அதனை ஏறுமானம் (Increment) செய்தல்.
  4. ஆணைகளைச் செயல்படுத்தத் தேவையான தரவுகளை நினைவகத்திலிருந்து அல்லது உள்ளிடு சாதனத்தில் இருந்து வாசித்தல். தேவைப்படும் தரவுகள் இருக்கும் இடம் பெரும்பாலும் ஆணைக் குறிமுறைகளுள் தரப்பட்டிருக்கும்.
  5. தேவையான தரவுகளை கணித ஏரண அகத்துக்கு அல்லது பதிவகத்துக்கு வழங்குதல்.
  6. ஆணைகளை நிறைவேற்றுவதற்கு, கணித ஏரண அகத்தின் அல்லது வேறு சிறப்பு வன்பொருட்களின் தேவை இருப்பின், அவ்வேலையைச் செய்வதற்குக் குறித்த வன்பொருளுக்கு ஆணையிடுதல்.
  7. கணித ஏரண அகத்திலிருந்து கிடைக்கும் முடிவுகளை நினைவகத்தின் ஒரு இடத்திலோ, பதிவகத்திலோ, வெளியீட்டுச் சாதனம் மூலமாகவோ எழுதுதல்.
  8. மீண்டும் முதலாவது படிமுறைக்குச் செல்லுதல்.
கருத்துரு அடிப்படையில், ஆணைச்சுட்டி என்பது இன்னொரு நினைவகமே என்பதால், இது கணித ஏரண அகத்தில் செய்யப்படும் கணிப்பீடுகளினால் மாற்றப்படலாம். ஆணைச் சுட்டிக்கு 100 ஐக் கூட்டுவதன் மூலம் அது அடுத்த ஆணையை நிரலில் 100 இடங்கள் கீழே தள்ளியுள்ள இடத்திலிருந்து வாசிக்கும்படி செய்யலாம். ஆணைச்சுட்டியை மாற்றும் ஆணைகள் தாவல்கள் எனப்படுகின்றன. இவை, கணினிகளால் திரும்பத் திரும்ப நிறைவேற்றப்படக் கூடிய ஆணைகளான கண்ணிகள், நிபந்தனை ஆணைகள் என்பவற்றுக்கும் இடமளிக்கின்றன.
ஒரு ஆணையைச் செயல்படுத்துவதற்காகக் கட்டுப்பாட்டகம் நடைமுறைப்படுத்தும் இயக்கங்களுக்கான படிமுறைகள் ஒரு சிறிய கணினி நிரல்களைப் போன்றவை என்பது கவனிக்கத் தக்கது. உண்மையில் சில சிக்கலான மையச் செயலக வடிவமைப்புக்களில், இத்தகைய வேலைகளைச் செய்யும் நுண்குறிமுறைகளை இயக்குவதற்காக நுண்வரிசைமுறையாக்கி (microsequencer) என்னும் சிறிய கணினி பயன்படுத்தப்படுவது உண்டு.

திடீர் நினைவகம்

திடீர் நினைவகம்

திடீர் நினைவகம் (flash memory) என்பது ஒரு வகை படிப்பு நினைவகம் (ROM). ஒரு பதிமுறைமையில் திடீர் நினைவகத்தில் தொடக்க நிரற்றொடரை (bootup code) பதிந்துக் கொள்ளப்படுகிறது. இவ்வகை நினைவகங்கள் புகைப்படக்கருவிகள், அலைபேசிகள், சலவைப்பெட்டிகள், சீருந்து பதிமின்னணுவில் (car embedded electronics), பொதுவாக அனைத்து பதிபயனகங்களில் (embedded applications) பிரபலமாகிவிட்டது.
இரண்டு வகைகளான திடீர்நினைவகச் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் வகை இல்லல்லது திடீர்நினைவகம். முதல் வகை இல்லல்லது திடீர்நினைவகம் (NOR flash). இதில் நிரற்றொடர் செயற்பாடு (code execution) விரைவானது. ஆனால் அழிப்பு மந்தமானது. கடந்த ஆண்டுகளாக இந்த வகை திடீர் நினைவகம் பிரபலமாக இருந்து வந்தது. அண்மைக் காலங்களாக இல்லும்மை திடீர்நினைவகம் (NAND) மிகவும் புழக்கத்தில் பயன்பட்டு வருகிறது. இவ்வகை திடீர்நினைவகம் இல்லும்மை வகையை விட அதிகக் கொள்ளளவில் கிடைக்கிறது.

Friday, November 27, 2009

எங்கள் தலைவன் பல்லாண்டு நலமுடன் வாழ்கவே!

எங்கள் தலைவன் பல்லாண்டு நலமுடன் வாழ்கவே!

கண்ணியத்தின் காவலனே நீ வாழி
கண்ணிமை நீ எனக்காணம் விழிகள்
போற்றிடும் தேவனே நீ வாழி
எங்கள் நிலம் எங்கள் வளம் எங்கள் தமிழ்க்குலம்
காக்க வந்த சாமி நீ

நீ வாழ்க வாழ்கவென தேவார திருவாசகம் பாடுதற்கு
நாயன்மார்கள் இன்றில்லை இவ்விடம்
தமிழினக் கேந்திரங்களை காவல்கொள்ளும்
காத்தவராயர்களே காவலராய் உண்டு உன்னிடம்

வங்கக் கடலும் வந்து வணங்கும் வல்வையிலே உதித்தவன் நீ
வீரம் மிக்க விளை நிலத்தின் தாயுமானவனும் நீ

பிறந்தான் தலைவன் பிறந்தான்
தமிழ் மக்களுக்காகப் பிறந்தான்
வாழ்ந்தான் தலைவன் வாழ்ந்தான்
தமிழ் மக்களின் விடியலுக்காக வாழ்ந்தான்

இருப்பான் தலைவன் இருப்பான்
தமிழ் மக்களின் இதயத்தில் இருப்பான்
வருவான் தலைவன் வருவான்
தமிழ் மக்களின் இன்னலைப் போக்க வருவான்

மறவர் தலைவனின் 55வது அகவை இது
மறக்குமா! தலைவனின் பிறந்த நாளை தமிழினம் மறக்குமா!
எங்கள் தலைவன் பல்லாண்டு நலமுடன் வாழ்கவே!

தந்தைபெரியார்

தந்தைபெரியார்



தோற்றம் - 17-9-1879
மறைவு-24-12-1973


ஈ.வெ. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஈ.வெ.ரா ஈ.வெ. ராமசாமி நாயக்கர், பெரியார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ஈ.வெ.ரா சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாக கருதப்படும் திராவிடர் கழக்கத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாக்க் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம விழுமியத்தை கடைப்பிடிக்கும் பார்பனியம், பெண்களைத்தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை, சமயம் என்பவை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதாக்க் கருதிய ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். இவருடைய விழுமியங்களும், கொள்களைகளும், தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் (சுயமரியாதை இயக்கம், நாத்திகம்), அரசியல் பரப்பிலும் (திராவிடர் கழகம்) ஆழ்ந்த சலனங்களும், தாக்கங்களும் ஏற்படுத்தியவை.

வாழ்க்கை வரலாறு

  • 1879: செப்டம்பர் 17, ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர், சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்
  • 1885:திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
  • 1891:பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்
  • 1892:வாணிபத்தில் ஈடுபட்டார்
  • 1898:நாகம்மையை (அகவை-13) மணந்தார்.
  • 1902:கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
  • 1904:ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார்.(அக் குழந்தை ஐந்தாம் மாத்த்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை)
  • 1907:பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் க்க்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப் பணியாற்றினார்.
  • 1909:எதிர்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
  • 1911:தந்தையார் மறைவு
  • 1917:ஈரோடு நகரமன்றத்தின் தலைவரானார்.

அரசியல்

தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள். அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் நாட்டிற்காகவே என்று எண்ணிப் பணியாற்றியவர். ஈ.வெ.ரா சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

ஈரோடு நகர்மன்றத் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் போன்ற பதவிகளை வகித்தவர். ‘குடியரசு’ ‘ரிவோல்ட்’ ‘புரட்சி’ ‘பகுத்தறிவு’ ‘விடுதலை’ ஆகிய இதழ்களை தோற்றுவித்தவர். ஜஸ்டிஸ் கட்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடக் கழகம் என மாற்றி இயக்கமாக ஆக்கியவர். இந்தி எதிர்ப்பு, இன உணர்வு, பெண் கல்வி என இயக்கத்தின் கொள்கைக்காகவே வாழ்ந்து வரலாறானவர். வெளிநாட்டுப் பயணங்கள் பல மேற்கொண்டவர். கொண்ட கொள்கைக்காக பலமுறை சிறை சென்றவர். வைக்கம் வீர்ர். ஈரோட்டுச் சிங்களம், தன்மானத் தலைவர், பெரியார் என பல புகழ் மாலைகள் இவரைச் சேர்ந்து பெருமைப்பட்டன.


பொதுவுடமை

“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது”
“பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது”

என்றெல்லாம் முன்னோர்கள் மொழிவார்கள். கரைக்காய் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்றால் முதலில் விதை போட வேண்டும். விதை முளைத்து செடியாக வேண்டும். பிறகு அச்செடி படர்வதற்கு வகை செய்ய வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டும். செழிப்பாகக் காய்ப்பதற்கு எரு இட வேண்டும். பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

இப்டியெல்லாம் பாடுபட்டால்தான் சுரைக்காய் கிடைக்கும். அதனால்தான் “ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது” என்றார்கள். அதாவது அனுபவம்தான் சிறந்த படிப்பு ஆகும்.

பெரியார் அவர்கள் காசிக்குச் சென்று திரும்பியதால் பல அனுபவங்களைப் பெற்றார். பசித்துன்பத்தை அனுபவித்திருக்கிறார் பல குணங்கள் கொண்ட மனிதர்களுடன் பழகியிருக்கிறார். கோவில்களிலும் மடங்களிலும் நடக்கும் முறைகேடுகளை நேரடியாகவே கண்டு மனம் வெதும்பியிருக்கிறார். காசு, பணத்தின் அருமையையும் உணர்ந்திருக்கிறார்.

அனுபவமே சிறந்த ஆசான். அதனைக் தன் பயணத்தின் போது அறந்தார் பெரியார். பணக்காரன் - ஏழை, உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்றெல்லாம் மக்களிதையே ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதை அவர் அறிந்தார். சமூகச் சீர்திருத்தம்பற்றி அவரது உள்ளத்தில் சிந்தனைகள் தோன்றலாயிற்று.

காசியிலிருந்து மனச்சோர்வுடன்தான் ஊர் திரும்பியிருந்தார். மகனுக்குப் பொறுப்பு வரவேண்டும் என்று தந்தை விரும்பினார். உடனே அவர் தன் பெயரிலிருந்த நிறுவனத்தை பெரியார் பெயருக்கு மாற்றினார்.

“ஈ.வெ. ராமசாமி நாயக்கர் மண்டி” என்று பெயரிடப்பட்டது. பெரியார் பொறுப்பேற்று வணிகத்தை கவனித்து வந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்திஏழு.

வணிகத்தில் ஈடுபட்ட அதைசமயம் உடன் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்து வந்தார். பெரியாருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவர்களில் கிறிஸ்தவர், முஸ்லீம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களும் இருந்தனர். எல்லோரிடமும் அன்பாய் பழகுவார். எல்லோரையும் சமமாக எண்ணுவார். அவர்கள் வீட்டில் நடைபெறும் விழாக்களில் தவறாது கலந்துகொள்வார்.

வியாபாரத்தில் யாருக்கேனும் சிக்கல் எழுந்தால் பெரியார் அதைத் தனது பேச்சுத்திறமையால் தீர்த்து வைப்பார். குடும்பத்தில் சொத்துத் தகராறுளைக்கூட தீர்த்து வைப்பார்.

எல்லாம் தெரிந்தவராக, எல்லோருக்கும் நல்லவராக பெரியார் திகழ்ந்தார்.

தொண்டு செய்வது பெரியாரின் இரத்தத்தில் ஊறிய பண்பாடு ஆயிற்று.

ஒருமுறை ஈரோடு நகரில் ‘பிளேக் நோய்’ பரவிற்று; பிளேக் ஒரு கொடுமையான தொற்றுநோய், அப்பொழுதெல்லாம் இன்றைக்கு இருப்பதுபோல் நவீன மருத்துவவசதி கிடையாது. ஊரில், ‘பிளேக் நோய்’ என்று கேள்விப்பட்டவுடன் பலர் ஊரைவிட்டே ஓடிவிட்டார்கள்! அவ்வளவு பயம்.

ஆனால், பெரியார் துணிவுடன் பிளேக் நோயால் அவதிப்பட்ட நோயாளிகளுக்கு ஓடி ஓடி உதவி செய்தார். அவருடன் அவரது தோழர்களும் சென்று உதவினார்கள். ஏழைகளின் குடிசைகளுக்குச் சென்றார். அவர்களைக் காப்பாற்றிட கடும் பணியாற்றினார். நோய்க் கொடுமையால் பலர் இறந்து போனார்கள். அப்படி இறந்து போனவர்களை பெரியாரே இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றார்.

வட இந்தியாவில் ‘பிளேக் நோய்’ தாக்கியபோது ஓடிச் சென்று உதவியவர் இரும்பு மனிதர் வல்லபாய்ப்படேல். அதேபோல் தமிழ்நாட்டில் ஒரு இரும்பு மனிதராய்த் தொண்டாற்றினார் தந்தை பெரியார்.

பெரியாரின் தொண்டு ஈரோடு முழுவதும் போற்றப்பட்டது. பல அரசு அதிகாரிகளும், அறஞர்களும் பெரியாரின் நண்பர் ஆனார்கள்.

தமிழறிஞர் பா.வெ. மாணிக்க நாயக்கர் பெரியாரின் பேச்சுத்திறனால் ஈர்க்கப்பட்டவர். பெரியாரின் நெருங்கிய நண்பர் ஆனார்.

புலவர் மருதையா பிள்ளை என்பவர் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர். அவரும பெரியாரின் சமூகச் சீர்த்திருத்தக் கொள்கைகளுக்கு ஆதரவு அளித்தார்.

கைவல்ய சாமியார் பெரியாரின் நட்பு தமிழகமே அறியும்.

பெரியார் நேர்மையானவர். உண்னையானவர். அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதவர். இக்காரணங்களால் ஈரோட்டு மக்கள் இவரிடம் மதிப்பும் மரியாதையும் காட்டினார்கள்.

ஊரில் உள்ள பல கோவில்களில் இவரது சேவையால் நிர்வாகம் ஒழுங்காக நடந்தப்பட்டது. அரசுக்கு சொந்தமான கோயில்களிலும் பெரியார் தொண்டாற்றியுள்ளார். கோயில் உற்சவங்களை பெரியாரே முன்நின்று நடத்தியுள்ளார்.

திருவிழாக்கள் வீண் செலவு என்ற கொள்கை உடையவர்தான் பெரியார் என்றாலும், பொறுப்பு ஏற்றுக்கொண்டதால் திருவிழாக்களையும் செவ்வனே செய்து முடித்தார்.

கோயல் திருப்பணிகளை அவரே ஏற்று செய்து முடித்துள்ளார். பழுதடைந்த கோயில்களை புதுப்பித்துள்ளார். பல கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திப் பெருமை சேர்த்துள்ளார். கோயில் சொத்துக்கள் கொள்ளை போகாமல் பாதுகாத்தார்.

கோயில்களில் நம்பிக்கை இல்லாதவர்தான் பெரியார். ஆனால், கொடுத்துள்ள பணியினைக் குறைவுபடாமல் செய்து முடிக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கடைபிடித்தவர்.

“எப்படிப்பட்ட நம்பிக்கை இல்லாத காரியத்தை ஏற்றுக் கொண்டாலும் நாணயமாகவும் அதிக்க் கவனமாகவும் செய்து வருவேன்” என்று அவரே கூறுவார்.

கோயில் சொத்தைக் கொள்ளை கொள்ளவும் தம் நலனுக்குப் பயன்படுத்தவும் முன்வருவோர்தாம் ஏராளம். அப்படியின்றி கோயில் சொத்து கொள்ளை போகாமல் காத்தவர் பெரியார். ஆம் அவர்தான் பெரியார்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைவிட கடவுள் நம்பிக்கைக் கடுகளவும் இல்லாத பெரியார்தான் கோயில் காரியங்களைப் பழுது இன்றி செய்தார்.

பெரியார் தேவஸ்தான கமிட்டித் தலைவராக இருந்த போதுதான் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தைக் காட்டினார். பெரியார் தலைவராகப் பொறுப்பேற்றபோது தேவஸ்தானம் கடனில் மூழ்கித் தத்தளித்தது. அவர் தனது நேரிய நடவடிக்கைகளால் முதலில் கடனையெல்லாம் அடைத்தார். பிறகு பல ஆண்டுகள் அவரே தலைவராய் வீற்றிருந்தார். அவர் பதவி விலகும் போது சுமார் 45,000 ரூபாய்வரை சேமித்துக் காட்டினார். இதிலிருந்து நாம் அவரின் சேவை மனப்பான்மையை அறியலாம்.

“எடுத்த காரியம் யாவினும் வெற்றி” என்பது பெரியார் வாழ்வில் உண்மையாயிற்று.

ஈரோடு நகரவைப் பாதுகாப்புத் தலைவராகப் பெரியார் பணியாற்றியுள்ளார். அதே சமயம் சேலம் நகரவைத் தலைவராக ராஜாஜி அவர்கள் பணியாற்றினார்.

ஈரோடு நகராட்சியின் பணிகள் ராஜாஜியைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக சுத்தம், சுகாதாரம் ஈரோட்டில் சிறப்பாக இருந்தது.

“உங்கள் சுகாதார அதிகாரிகளை எங்கள் சேலம் நகருக்கு அனுப்பிவேயுங்கள். அவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு எங்கள் நகரையும் தூய்மையாக வைத்துக்கொள்கிறோம்”. என்று ராஜாஜி அவர்களே வியந்து பாராட்டியுள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1919 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் (Non-Co-Operation Movement) நடைபெற்றது. அப்பொழுது பெரியார் நகரவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதுமட்டுமல்ல, ஆங்கில அரயாங்கம் “ராவ்பகதூர்” பட்டம் வழங்க முன்வந்தது. அந்தப் பட்டத்தையும் அவர் பெற மறுத்துவிட்டார்.

பட்டங்களையும் பதவிகளையும் பாத தூசியாக பாவித்தவர் பெரியார். அவர்தான் பெரியார்; அவரே பெரியார்.

கௌரவ நீதிபதியாகவும், பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

பெரியார் ஈரோடு நகரவைத் தலைவராக இருந்தபோதுதான் ஈரோடு நகருக்கு காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டது. பெரியாரின் உழைப்பே அதற்குக் காரணம்.

சாலைகளை அகலப்படுத்தினார். போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தினார். ஊர் மக்கள் அனைவருமே பெரியாரைப் பெரிதும் பாராட்டினார்கள். சாலைகளை அகலப்படுத்துவதற்காக சாலை ஓரங்களில் இருந்த கடைகளை இடித்துத் தள்ளவேண்டிய நிலை.

கடைக்காரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதில் பலர் பெரியாரின் நண்பர்கள்; உறவினர்கள். பெரியார் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேயில்லை.

“பசிநோக்கர்-கண் துஞ்சார்-எவ்வெவர் தீமையும் மேற் கொள்ளார்” என்ற செய்யுளுக்கு இலக்கணமாய் அவர் சேவை புரிந்தார்.

பெரியாரின் பரந்தமனம் போலவே சாலைகளும் அகலமாக்கப்பட்டன. பெரியார் அவர்களின் துணிச்சல், அஞ்சாமை பாராட்டப்பட்டன. பெரியார் அவர்கள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் என்றும் பாதிக்கப்பட்டதே கிடையாது. மனக்கட்டுப்பாடு உடையவர். அதனால்தான் அவரால் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்த முடிந்தது.

பெரியாரின் தந்தையார் வெங்கட்ட நாயக்கர் 1911இல் காலமானார். தந்தையாரின் விருப்பப்படி அவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். அங்கே ஒரு சமாதியும் எழுப்பப்பட்டது.

பெரியாரின் தந்தையார் மிகச்சிறந்த கொடையாளி. அவர் வீட்டில் எப்போதும் விருந்து நடந்தவண்ணம் இருக்கும். இதனை நாம் முன்னரேப் பார்த்தோம். அதேபோல் அவர் மறைவுக்குப்பின் “டிரஸ்ட்” ஒன்று நிறுவப்பட்டது. அவரது சொத்துக்களில் பெரும் பங்கு அந்த டிரஸ்ட்டுக்கே எழுதி வைக்கப்பட்டது. பெரியாரின் அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமி இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால், பெரியார் அவர்கள் தந்தையின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கவில்லை. எனவே முழு சம்மதம் தந்தார். பொன் பொருளுக்கு ஆசைப்படாத பொன்னானவர் பெரியார்.

ராஜாஜி, பெரியார் நட்பும் இந்தக் காலத்தில் வளர்ந்தது.

காந்தியடிகளின் வேண்டுகோளின்படி 1920இல் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது. காந்தியடிகளின் மதுவிலக்குக் கொள்கை, தீண்டாமை ஒழிப்பு போன்ற கொள்கைகள் பெரியாருக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே காங்கிரஸ் கட்சியில் பெரியார் சேர்ந்தார். ஒத்துழையாமை இயக்கம் வெற்றி பெற தீவிரமாக பிரசாரம் செய்தார். காங்கிரஸின் முழுநேரத் தொண்டனாகவே தன்னை ஆக்கிக்கொண்டார். தான் வகித்து வந்த எல்லா பதவிகளையும் விட்டு விலகினார். அதுமட்டிமல்ல, நீண்டகாலமாக பெயர்பெற்று விளங்கி வந்த வணிக நிறுவனத்தை மூடிவிட்டார். பஞ்சாலை ஒன்று இருந்தது. அதையும் நிறுத்திவிட்டார்.

பெரியாரின் சிந்தனை…. செயல் எல்லாமே காங்கிரஸ்…. காங்கிரஸ் என்றாயிற்று. காங்கிரஸ் பேரியக்கக் கொள்கைகளுக்காக ஊர் ஊராக சென்று உற்சாகமாக்க் குரல் கொடுத்தார்.

பெரியார், ராஜாஜி, வ.உ.சி. போன்றோர்கள் காங்கிரஸில் இணைந்து ஒன்றாகப் பணியாற்றினார்கள். அந்த நேரத்தில் பெரியாரின் அரசியல்பணி இவ்வாறு தொடங்கியது.

புரட்சி மொழிகள்

  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
  • பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
  • மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
  • விதியை நம்பி மதியை இழக்காதே.
  • மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
  • மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
  • பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
  • பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
  • பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
  • தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
  • கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
  • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
  • ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
  • ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
  • வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
  • ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
  • என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
  • எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
  • மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

நினைவுகள்

தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள். 95 ஆண்டுகள் வாந்தார் என்றாலும், அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் நாட்டிற்காகவே என்று எண்ணிப் பணியாற்றியவர். அறியாமையையும், மூடப்பழக்கவழக்கங்களையும் எதிர்த்துப் போராடியவர். தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டியவர். எதிர்ப்புக்கும், ஏளனத்திற்கும், மிரட்டலுக்கும், அடக்குமுறைக்கும் அஞ்சாமல், சமூக, பொது வாழ்விலும், பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழவேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்தவர்.

ஈரோடு நகர்மன்றத் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் போன்ற பதவிகளை வகித்தவர். ‘குடியரசு’ ‘ரிவோல்ட்’ ‘புரட்சி’ ‘பகுத்தறிவு’ ‘விடுதலை’ ஆகிய இதழ்களை தோற்றுவித்தவர். ஜஸ்டிஸ் கட்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடக் கழகம் என மாற்றி இயக்கமாக ஆக்கியவர். இந்தி எதிர்ப்பு, இன உணர்வு, பெண் கல்வி என இயக்கத்தின் கொள்கைக்காகவே வாழ்ந்து வரலாறானவர். வெளிநாட்டுப் பயணங்கள் பல மேற்கொண்டவர். கொண்ட கொள்கைக்காக பலமுறை சிறை சென்றவர். வைக்கம் வீர்ர். ஈரோட்டுச் சிங்களம், தன்மானத் தலைவர், பெரியார் என பல புகழ் மாலைகள் இவரைச் சேர்ந்து பெருமைப்பட்டன.

அவரின்நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லம் நினைவு இல்லமாகவும், கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பக்கங்கள்

கடந்த ஆயிரமாண்டில் வாழ்ந்த சமூகப் புரட்சியாளர்களில் எடுத்துக் காட்டாக விளங்கியவர் பெரியார் ஈரோடு வெங்கடநாய்க்கர் ராமசாமி அவர்கள் (1879-1973), ஜாதிமுறையை ஒழிக்கவும், பிறப்பின் அடிப்படையிலான வேறுபாடு அற்ற சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் அச்சமின்றி. அயர்வின்றி அவர் எடுத்த ஈடுஇணையற்ற முயற்சிகள் வரலாற்றில் தனி இடம் பெறத்தக்கன. ஒத்துழையாமை இயக்கத்தின் போது பெரும் தியாகங்கள் பலவற்றைச் செய்த அவர் 1920-23 ஆண்டுகளில் ஆக்கபூர்வமான செயல்திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டார். சமூகத்தின் சமத்துவம் வேண்டி நவீன இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் அமைதிப் போராட்டமான வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. 1925-இல் சுயமரியாதை இயக்கத்தையும், 1944-இல் திராவிடர் கழகத்தையும் தோற்றுவித்த அவர், மனித மாண்பு, பகுத்தறிவு, பாலியல்சமத்துவம, சமூக நீதி போன்ற கொள்கைகளைப் பரப்பினார். அவர் மேற்கொண்ட மக்கள் தழுவிய போராட்டத்தின் காரணமாகவே சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க 1951-ஆம் ஆண்டில் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு முதன் முதலாகத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. எதனையும் முடிவெடுக்க அவர் தனது எழுத்துக்கள். பேச்சுகள் மூலம் மக்களுக்குக் கற்பித்தார். புத்துலகின் வருமுன் உரைப்பவர் அவர் என யுனெஸ்கோ நிறுவனம் மிகவும் பொருத்தமாக விவரித்துள்ளது. தனது சொத்துக்கள், மக்களின் நன்கொடைகள் எல்லாம் பொது அறக்கட்டளையாக்கி மக்களுக்கே தந்த வள்ளல் அவர்!

Thursday, November 26, 2009

ஜீன்ஸ் போட்டால் ஜெயில் : சூடானின் சூடான சட்டம்


இப்படி ஒரு துயரம் நடக்குமென கிரேஸ் உஷாங் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நைஜீரியா தனது 49வது சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடிக் கொண்டிருந்த அக்டோபர் ஒன்றாம் தியதி. கிரேஸ் உஷாங் எனும் அந்த இளம் பெண் ஆனந்தமாய் தெருவில் வந்தாள். சமீபத்தில் தான் அவள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நைஜீரியாவின் என்.வொய்.எஸ்.சி யில் இணைந்திருந்தாள்.

என்.வொய்.எஸ்.ஜி (National Youth Service Corps என்பது நைஜீரியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்களும், பாலிடெக்னிக் முடித்தவர்களும் இதில் ஓராண்டு பணி புரியவேண்டும். தங்கள் வீடுகளை விட்டு தூரமான ஒரு நகரில் மக்களோடு மக்களாகக் கலந்து வாழவேண்டும். பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும், மக்களுக்கு உதவவுமே இந்த ஏற்பாடு.

தெருவில் நடந்தவளை மொய்த்தன சில வாலிபக் கண்கள். பின் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு கிரேஸை நோக்கி வெறித்தனமாக வந்தனர். அங்கேயே கதறக் கதற அந்த இளம் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்தார்கள். பின் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியில்லாமல் ஹாயாக நடந்து போனார்கள். அவர்கள் அவளைப் பலாத்காரம் செய்யக் காரணம் அவள் அணிந்திருந்த உடை ! அது ஆபாச உடையாம் !

அவள் அணிந்திருந்ததோ ஒரு பேண்ட் மற்றும் மேலாடை ! இத்தனைக்கும் அது போலீஸ் யூனிபார்ம் போன்றது ! என்.வொய்.எஸ்.ஜி யின் அதிகார பூர்வ யூனிபார்ம் ! அதுவே ஆபாசமாம். ஆபாசக்காரிக்கு மரண தண்டனை கொடுத்தோம் என கூலாகச் சொன்னார்கள் கொலையாளிகள்.

நைஜீரியாவில் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் ஏதும் இன்னும் அமுல்ப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு செனட்டர் குழுவில் அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது. நைஜீரியா நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் வேண்டும் என உரை நிகழ்த்தினார் செனட்டர் உஃபாட் எக்கேட். இது சட்டமானால், ஆபாச உடை அணியும் பெண்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள், சாட்டையால் அடிக்கப்படுவார்கள் !

எது தான் இவர்களுடைய பார்வையில் ஆபாச உடை. கழுத்திலிருந்து இரண்டு இஞ்சுக்குக் கீழே காலின் கடைசி வரை முழுசும் மூட வேண்டும். இந்த பகுதியில் ஏதாவது கொஞ்சம் வெளியே தெரிந்தால் ஜெயில் தான். டிரஸ் கொஞ்சம் மெலிசாக இருந்தால் ஜெயில். ஜீன்ஸ் போட்டா ஜெயில். டிரஸ் டைட்டா இருந்தா ஜெயில். அதுவும் 14 வயது நிரம்பினாலே பெண்கள் இதைப் பின்பற்றியாக வேண்டும் ! அரசு இந்த திட்டத்தை சட்டமாக்க வேண்டுமென நினைக்கிறது. நைஜீரியப் பெண்களுக்கோ உள்ளுக்குள் திகிலடிக்கிறது. இந்த சட்டம் என்னென்ன அதிர்ச்சிகளைத் தருமோ எனும் அவர்களின் பயம் நூறு சதம் நியாயம். அதற்கு சரியான உதாரணமாய் இருக்கிறது சூடானில் நடந்த நிகழ்ச்சி.

சூடானில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் லுப்னா ஹுசைன் எனும் பெண். இவர் ஒரு பத்திரிகையாளர். யு.என் னில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திடீரென காவல் துறையினர் அவளையும் அவளுடன் அந்த ஹோட்டலில் இருந்த 12 பெண்களையும் கைது செய்தனர்.

முதலில் அவருக்கு ஏதும் புரியவில்லை. “என்ன சமாச்சாரம்” என்று விசாரித்தால், ஆபாச உடை தடுப்புச் சட்டமாம். சூடானில் ஆபாச உடை தடுப்புச் சட்டம் செயல்பாட்டில் இருக்கிறது ! இவர் அணிந்திருந்ததோ, கொஞ்சமும் உடலை வெளியே காட்டாத லூசான பேண்ட் ! முழுசும் மறைக்கும் மேலாடை ! லுப்னா திகைத்துப் போனார். இவருடைய திகைப்பையெல்லாம் காவல் துறை கண்டு கொள்ளவில்லை. எல்லாரையும் தூக்கி ஜெயிலில் எறிந்தார்கள். லுப்னாவுக்கு இருநூறு டாலர்கள் அபராதம் ! பிடிபட்ட பெண்களில் வேறு பத்து பேருக்கு என்ன தண்டனை தெரியுமா ? 40 கசையடிகள் !

நாற்பத்து மூன்று வயதான லூப்னா கொதித்துப் போனார். இதெல்லாம் கொடுமை. நான் பணத்தைக் கட்ட மாட்டேன். தைரியமிருந்தால் அடித்துப் பாருங்கள். கேவலமான இந்த சட்டத்துக்கு எதிராகப் போராடாமல் விடமாட்டேன் என கர்ஜித்தார். அரசு இவருடைய கத்தலையெல்லாம் காது கொடுத்துக் கேட்கவில்லை. இவருடைய விருப்பத்துக்கு மாறாக பத்திரிகை சங்கத்தினர் இவரை வெளியே கொண்டு வந்தார்கள். கட்ட வேண்டிய 210 டாலர்களை கார்த்தோம் கோர்ட்டில் கட்டினார்கள்.

லுப்னாவுக்கு செம கடுப்பு. எப்படி என்னை வெளியே எடுக்கலாம் ? காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு நாம் ஏன் உடன் படவேண்டும் என படபடத்தார். சிறையில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் ஆபாச உடை சட்டத்தில் கைதாகி உள்ளே இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் பணம் கொடுப்பது ? யார் விடுவிப்பது. அதில் பலர் கசையடி பட்டு கதறித் துடிக்கிறார்கள். அவர்களுக்கு யார் அரணாய் நிற்பது என லூப்னா வெகுண்டெழுந்தார். இதை உலகின் கவனத்துக்கு கொண்டு போகாமல் விடமாட்டேன் என கொதித்தார். கடந்த ஆண்டில் மட்டுமே சூடானின் கார்த்தோம் மாநிலத்தில் கைதான பெண்கள் சுமார் 40,000 பேர் என்பது குறிப்பிடத் தக்கது.

லுப்னா உடனடியாக நூற்றுக்கணக்கான அழைப்பிதழ்கள் அடித்தார். மின்னஞ்சல்கள் அனுப்பினார். “சூடானின் பத்திரிகையாளர் லுப்னா சாட்டையடி வாங்கப் போகிறார், வந்து பாருங்கள்” என்பதே தகவல். வழக்கு விசாரணைக்கு வந்தது. லுப்னா யு.என் பணியில் இருப்பதால் சும்மா விட்டு விடலாம் என நீதிபதி கூறினார். லுப்னாவோ, என்னை விட வேண்டாம். நான் யு.என் வேலையை ராஜினமா செய்கிறேன். சூடான் நாட்டுப் பெண்ணாக இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவது தான் முதல் வேலை என்றார்.

இந்த மனித உரிமைகள் மீறலை லுப்னா உலகின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். மனித உரிமைகள் கமிஷனும் தூக்கம் கலைந்து என்ன நடக்கிறது எனப் எட்டிப் பார்த்தது. அவர்கள் கேட்ட அதிர்ச்சிச் செய்திகள் அவர்களை நிலை குலைய வைத்தன. ஒரு பெண்ணுக்கு அவளுக்குப் பிடித்தமான உடை அணிய உரிமை இல்லையா ? அதுவும் பல கோடிப் பெண்கள் உலகெங்கும் அணியும் டீசண்டான உடையை அணிந்தாலே ஜெயிலா ? என மனித உரிமைகள் கமிஷன் களத்தில் இறங்கியிருக்கிறது.

அரசோ, இதில் மனித உரிமைகள் மீறல் ஏதும் இல்லை. எங்கள் இஸ்லாம் கோட்பாடுகளின் படி இந்த உடை தவறானது. சமூகத்தின் கலாச்சாரத்தைக் கெடுக்கக் கூடியது. 2005ல் நாட்டில் இயற்றப்பட்ட சட்ட எண் 152 க்கு இந்த ஆடை எதிரானது என அரசு பிடிவாதம் பிடிக்கிறது.

லுப்னா விடவில்லை. நானும் முஸ்லிம் தான். இஸ்லாமுக்கு எதிரான எதையும் நான் செய்யவில்லை. இந்தச் சட்டம் தான் இஸ்லாமுக்கு எதிரானது என மதத்தைத் துணைக்கு அழைத்தார். இவருடைய துணைக்கு எகிப்தின் உயர் இஸ்லாமிய தலைவர் கிராண்ட் முஃப்டி அலி கோமா வந்திருக்கிறார். இப்படி ஒரு சட்டம் இருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என ஆரம்பிக்கிறார் அவர். பெண்கள் பேண்ட் போடுவதை இஸ்லாம் மதம் தடுக்கவில்லை. பேண்ட் லூசாக, திக்கான துணியில் , உடலை மறைப்பதாக இருந்தால் போதும். இன்றைக்கு வரும் பெரும்பாலான உடைகள் பேண்ட் போன்ற மாடலில் தான் வருகின்றன. அதைத் தவிர்க்க முடியாது. உடைகளை இறுக்கமாய் அணிவது தான் தவறு என்கிறார் அவர்.

பெண்களுக்கு சம உரிமை, சுதந்திரம் என்று வாய்கிழியப் பேசும் உலகின் உண்மை நிலை இது தான். நைஜீரியாவில் நடந்த கிரேஸ் உஷாங்கின் மரணம் நைஜீரிய மக்களைப் போராட வைத்திருக்கிறது. சூடானில் வில் லுப்னாவுக்கு ஏற்பட்ட அவமானம் சூடான் மக்களை விழிக்க வைத்திருக்கிறது. பேண்ட்ஸ், ஜீன்ஸ் இவையே ஆபாசம், ஜெயில் குற்றம் என்பது உலகில் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக அளவில் தனது கவனத்தைச் செலுத்தி வரும் மனித உரிமைகள் கமிஷன் என்ன செய்யப் போகிறது என்பது தான் இப்போதைய சர்வதேசக் கேள்வி !